F "DEEN WE NEED" --- வகுப்பில்: April 2012

Sunday, April 22, 2012

திருநபியின் திருசரிதை


பாகம்--3

41அப்போது அவர்களுக்கெதிராக எதிர்ப்பு, யுத்தம் ஏதும் ஏற்பட்டதா?
இல்லை.இஸ்லாமிய படை மாக்கா நகருக்குள் நுழையும்போது ஒரு துளி இரத்தமும் சிந்த்தக்கூடாது என்று தம் தோழர்களுக்கு (ஸல்)அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.
42.நபி(ஸல்) அவர்கள் எப்பொழுது இவ்வுலகத்தை விட்டும் மறைந்தார்கள்?
ஹிஜ்ரி 10ம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் பிறை 12ல். (கி.பி 632ல் )
43.அப்பொழுது அவர்களின் வயதென்ன?
அப்போது அவர்களின் வயது 63.
44.நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்று உறுதிப் படுத்தியவர் யார்?
வரக்கா பின் நவ்ஃபல் அவர்கள்
45.வரக்கா பின் நவ்ஃபல் என்பவர் யார்?
அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தந்தையின் உடன் பிறந்தவரின் மகன் .
அக்காலத்தில் இவர் இஞ்சீலை இப்ரானி மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த கிறிஸ்தவ பாதிரியார்.

நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவியின் பெயர் என்ன?
 கதீஜா (ரலி)
நபி (ஸல்) அவர்கள் தமது எத்தனையாவது வயதில் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்தார்கள்? அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது என்ன?
நபி (ஸல்) அவர்களின் வயது 25, கதீஜா (ரலி) அவர்களின் வயது 40

நபி (ஸல்) அவர்களுடன் கதீஜா (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
 25 ஆண்டுகள்
நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களின் எத்தனை? அவர்களின் பெயர்களைக் கூறு
46. கதீஜா 2. சவ்தா  3. ஆயிஷா 4. ஹப்ஸா 5. ஜைனப் பின்த் குஜைமா (ரழி)6. உம்மு சலமா 7. ஜைனப் பின்த் ஜஹ்ஷ் 8. ஜூவைரியா 9. உம்மு ஹபீபா 10. ஷபியா 11. மைமூனா பின்த்
நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும்போது உயிரோடு இருந்த மனைவிமார்கள் எத்தனை? அவர்களின் பெயர்களைக் கூறு
9 பேர்
இவர்களில் கதீஜா, ஸைனப் பின்த் குஸைமா (ரலி) ஆகிய இருவரும் நபி (ஸல்) வாழும்போதே மரணமானார்கள்.
47.நபி(ஸல்) அவர்களின் குழந்தைகள்
நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை குழந்தைகள்?
ஆண் குழந்தை :3,பெண் குழந்தை:4
ஆண் குழந்தையின் பெயர் என்ன?
 காஸிம், அப்துல்லாஹ், இப்றாஹீம்
48.நபி (ஸல்) அவர்களின் பெண் குழந்தைகள் பெயர்கள் என்ன?
 ஜைனப் (ரலி), ருகைய்யா (ரலி), உம்மு குல்ஸþம் (ரலி), ஃபாத்திமா (ரலி)
நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகளில் இப்றாஹீமைத் தவிர அனைவரும் அன்னை கதீஜாவுக்குப் பிறந்தவர்களே!
ஆண் மக்கள் அனைவரும் சிறு வயதிலேயே மரணமடைந்தனர்.
ஃபாத்திமாவைத் தவிர்த்து மற்ற மூவரும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்து விட்டனர்.



Saturday, April 21, 2012

திருநபியின் திருசரிதை-2


பாகம்--2

21.முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு குறைஷி மக்களால் வழங்கப்பட்ட பெயர்கள் யாவைஏன்?

உண்மையாளர்(அஸ் ஸாதிக்)நம்பிக்கையாளர் (அல்-அமீன்) என்று அழைக்கப்பட்டார்கள். காரணம் இவ்விரண்டு குணங்களின் அடிப்படையிலேயே வளர்ந்து வந்தார்கள்.

22.கஅபத்துல்லாஹ்வைப் புதுப்பிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்ன உதவியை செய்தார்கள்?
 கஅபத்துல்லாஹ் கட்டுவதற்குரிய கற்களை எடுத்துச் செல்லும் வேலை செய்தார்கள்.

23.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் வஹி இறங்க ஆரம்பித்தது?

40 ஆம் வயதில்.

24.முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த இடத்தில் முதன்முதலாக வஹீ இறங்கியது?

ஹிரா என்னும் குகையில்

25.முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து வஹியை கொண்டு வந்த வானவர் பெயர் என்ன?

ஜிப்ரயீல் (அலை)

26.முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக இறங்கிய வஹி எது?

அல்-குர்ஆனின் 96 வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள். (96:1-5)
27.முதன் முதலில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் எனவும் ஏற்றுக்கொண்டவர் யார்?

பெண்களில்: அன்னை கதீஜா (ரலி)
ஆண்களில்: ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி)
இளைஞர்களில்: ஹஜ்ரத் அலி(ரலி)
அடிமைகளில்: ஹஜ்ரத் பிலால் (ரலி)
அடிமைகளிலிருந்து விடுதலையடைந்தவர்கலில்: ஹஜ்ரத் ஜெய்துப்னு ஹாரிதா(ரலி)

28.இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக தாயிப் நகர் சென்ற நபி (ஸல்) அவர்களை அந்த நகரின் மக்கள் எவ்வாறு நடத்தினார்கள்?

நபி (ஸல்) அவர்களை மிகவும் மோசமாக நடத்தினார்கள்.
 நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக சிறுவர்களைத் தூண்டிவிட்டனர்.

அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களைக் கல்லால் எறிந்து அவர்களின் இரு கணுக்கால்களில் இரத்தம் வரும் அளவுக்கு காயப்படுத்தினார்கள்.

29.மக்காவாசிகள் (ஸல்) அவர்களையும்,அவர் தோழர்களையும் தீங்கிழைக்க காரணம் என்ன?

அக்காலத்தில் அரபிகள் கொண்டிருந்த மூடக்கொள்கைகளை,தீய செயல்களை,சிலை வணக்கங்களை இல்லாமல் ஆக்கினார்கள்.

ஓரிறைக் கொள்கை,சமத்துவம்,சகோதரத்துவம் சுதந்திரம் போனற நற்குணங்களை ஏவினார்கள்.
இதற்காகவே அம்மக்கள் அவர்களையும்,அவர் தோழர்களையும் தீங்கிழைக்க ஆரம்பித்தார்கள்.

30.நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?

      ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள்

31.நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?

      ஏறத்தாழ பத்து ஆண்டுகள்.

32.ஹிஜ்ரத் என்றால் என்ன?
வாழும் நாட்டில் தீயவர்களின் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.
33.இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்?

ஹபஸா (அபிசீனியா)

34.நபி(ஸல்) அவர்களும் அவர் தோழர்களும் ஏன் மதீனாவிற்கு சென்றார்கள்?

மக்கா காஃபிர்களின் கொடுமைகள் தாங்கமுடியாததால் புகலிடம் தேடி மதீனா நகர் சென்றார்கள்.

36.நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வழியில் எந்த குகையில் தங்கினார்கள்?

ஃதவ்ர் என்னும் குகையில்

37.எப்போது ஹிஜ்ரத் சென்றார்கள்? அப்போது அவர்களின் வயது என்ன?

நபிப்பட்டம் கிடைத்து 13ம் வருட்த்தில் .அப்போது அவர்களின் வயது 53 ஆகும்.

38.ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகரை விட்டுமதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து
.
39.மதீனாவாசிகள் நபி(ஸல்) அவர்களை எவ்வாறு வரவேற்றார்கள்?

அன்புடன் வரவேற்று அவ்ர்களின் உயரிய உபதேசங்களைக் கேட்டு இஸ்லாமில் இனைந்துக் கொண்டார்கள்.

40. நபி (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவிற்கு  எப்பொழுது திரும்பிச் சென்றார்கள்?

ஹிஜ்ரி 8ம் ஆண்டு அல்லாஹு அக்பர் என்ற தக்பீருடன் பைத்துல்லாஹ்வை அடைந்து வலம்(தவாஃப்)
வந்தார்கள்.

Friday, April 20, 2012

திருநபியின் திருசரிதை-1

   பாகம் --1
                                  
1.உனது நபி யார்?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

2.நபி (ஸல்) அவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்தவர்கள்?
அரேபியிர்களின் உயர்ந்த குலமான குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆதம் (அலை) அவர்களின் 51வது தலமுறையைச் சேர்ந்தவர்கள்.

3.அவர்கள் எங்கு பிறந்தார்கள்?
மாக்கா நகரில்

4.அவர்களின் புனித உடல் எங்கு அடக்கப் பெற்றது?
மதீனா நகரில்

5.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?
ஆமினா அம்மையார்

6.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையார் பெயர் என்ன?
அப்துல்லாஹ்

7.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன?
அப்துல் முத்தலிப்B

8.நபி(ஸல்) அவர்களின் முப்பாட்டானார் பெயர் என்ன?
ஹாஷிம்

9.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்?
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.

10.முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த வருடம் பிறந்தார்கள்?
கி.பி. 570 ஆம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதம் பிறந்தார்கள். ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12-ல் பிறந்தார்கள்.

11.முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் எப்படி அழைக்கப்படுகிறது?
யானை ஆண்டு என அழைக்கப்படுகிறது.

12.நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது மரணமடைந்தார்கள்?
தாயின் வயிற்றில்  இருக்கும் போது

13..முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் எப்போது மரணமடைந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதாக இருக்கும் போது

14.முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் மரணத்திற்குப் பின்னர் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?
தமது பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

15முஹம்மது (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் எப்போது மரணமடைந்தார்கள்?
நபி (ஸல்) அவர்களுக்கு எட்டு வயதாக இருக்கும் போது.

16.அப்துல் முத்தலிப் அவர்களின் மரணத்திற்குப்பிறகு முஹம்மது (ஸல்) அவர்கள் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?
17.நபி (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார் அபுதாலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

18.முஹம்மது (ஸல்) அவர்கள் குழந்தையாக இருந்த போது அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய் யார்?
ஹலீமத்துஸ் ஸஃதிய்யா என்ற அம்மையார்.

19.நபி (ஸல்) அவர்கள் சிறு வயதில் என்ன வேலை செய்தார்கள்?
 ஆடு மேய்த்தல்

20.சிறுவயதிலிருந்தே நபி(ஸல்) அவர்களிடமிருந்த குணங்கள் யாவை?
  உயர் சிந்தனைபேச்சில் உண்மைநம்பகத்தன்மை> பொறுமை>நேர்மை>வாக்குறுதி > ஒழுக்கம்>மரியாதை>,இரக்கம்,போன்ற இம்மை மறுமையில் நற்பயன் விளைவிக்க்க் கூடிய நற்குணங்கள் அனைத்துமாகும்.