F "DEEN WE NEED" --- வகுப்பில்: March 2012

Wednesday, March 14, 2012

ஹஜ்


ஹஜ் பற்றி சிறு விளக்கம்

1.ஹஜ் என்றால் என்ன?

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ் ஆகும்.
 ஹஜ் என்ற அரபுச் சொல்லிற்கு (புனிதமான ஒன்றை) நாடிச் செல்லல் என்பது பொருளாகும்.
செல்வமும், வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ள ஒரு முஸ்லிம் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்கா நகர் சென்று இறைவன் விதித்த கடமைகளை செய்வதற்கு ஹஜ் எனப்படும்.

2.ஹஜ் யார் மீது கடமையாகும்?

பிரயாணம் செய்வதற்கான உடல் ஆரோக்கியமும் ,பொருளாதார வசதியும் உள்ள ,பருவ வயதை அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஹஜ் செய்வது கடமையாகும்.

3.ஹஜ்ஜின் சிறப்பைப் பற்றி ஒரு சில நபி மொழிகள் கூறு

1 நாம் செய்யும் செயல்களில் சிறந்தது எது?' என்று நபியிடம் ஒருவர் வந்து கேட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்று பதிலுரைத்தார்கள்.

'அதன்பின் எது?' என கேட்கப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள்.

'அதன்பின் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, ' ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்' என்றார்கள்'

2.ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கம் தான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

3.ஒரு பெண்மணி நபியிடம் வந்து எனது தாய் ஹஜ் செய்யாமல் மரணமடைந்து விட்டார்என்று கூறினார்.

அதற்கு நபியவர்கள். உன் தாய்க்காக நீ ஹஜ் செய்துக் கொள்என பதில் கூறினார்கள்

4.எல்லா வசதிகளும் இருந்து ஹஜ் செய்யாதவனின் நிலை என்ன?
எல்லாவிதமான வசதி, வாய்ப்புக்களும் இருந்தும் ஹஜ் செய்யாமல் இருப்பவர்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கும்போது, “ வசதி இருந்தும் ஹஜ் செய்யாதவர் யஹுதியாகவோ,(Jew) நஸாராவாகவோ(Christian) மரணிக்கட்டும் என்று சபித்துக் கூறியுள்ளார்கள்.(நவூதுபில்லாஹ்—அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!)

அல்லாஹ் நம்மனைவ்ருக்கும் ஹஜ்ஜை நஸீபாக்குவானாக்! ஆமீன்.

ஜகாத்


ஸகாத் பற்றி சிறு விளக்கம்

ஸகாத் என்றால் என்ன?

இதன் பொருள் தூய்மையாக்குதல் என்பதாகும்.
ஒருவன் தனது அனைத்து பொருள்களிலிருந்தும் நாற்பதில் ஒரு பகுதியை எடுத்து ஏழைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவனிடம் உள்ள மற்ற பொருளும் தூய்மை பெறுகிறது.
மேலும் அவனுடைய உள்ளமும் கஞ்சத்தனத்திலிருந்து தூய்மை பெறுகிறது
.
ஸகாத்தின் நோக்கம் என்ன ?

பணம் உடையவர்களிடம் மட்டுமே பணம் இருக்க்க் கூடாது.அது எல்லா மக்களையும் சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறிபை; போதிப்பதாகும்.

ஸகாத் கடமையான பொருட்கள்:

ஸகாத் ஐந்து வகை பொருட்கள் மீது கடமையாகிறது:

1) தங்கம்
யாரிடமேனும் தமது அத்தியாவசியப் பொருட்களான உணவு,உடை, உறையுள்,தொழிற் கருவிகள்போக 85 கிராம் தங்க நகைகளோ, தங்கமோ, அல்லது அதற்கு மேற்பட்டோ ஓராண்டு முழுவதுமிருந்தால் அதற்கு நாற்பதில் ஒரு சதவிகிதம்-அதாவது இரண்டரை சதவிகிதம்- ஸகாத் கொடுத்தாக வேண்டும்.

குறிப்பு:
சேமிப்புடைய நோக்கம் மட்டும் இருக்குமானால் கண்டிப்பாக கொடுக்கவேண்டும்.

2)வெள்ளி

3)வியாபாரப் பொருட்கள் 

4) கால் நடைகள் ஆடு,மாடு, ஒட்டகம்.
                                                                                                  5) விவசாய பொருட்கள்.—grains
தானியங்களைப் பொறுத்தவரை. விவசாயம் செய்து விளைந்து அறுவடை செய்யும் காலங்களில் அதற்குரிய  ஸகாத்தை கணக்கி;ட்டுக் கொடுக்க வேண்டும்

வியாபாரத்திற்கு வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருப்பினும் அதற்கு கட்டாயம் ஸகாத் வழங்கியே ஆக வேண்டும்.
.

Saturday, March 10, 2012

ஐங்காலத் தொழுகையின் நேரங்கள்:


ஃபஜ்ர் : அதிகாலை உதயமானதிலிருந்து சூரியன் உதயமாகும் வரைக்குமாகும்.
லுஹர் : சூரியன் அதன் உச்சியிலிருந்து மேற்கு நோக்கி சாய்ந்த்திலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரையாகும்.
அஸர் : ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவை அடைந்தவுடன் ஆரம்பமாகி சூரியன் மறையும் வரை நீடிக்கின்றது.
மஃரிப் : சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம் மறையும் வரைக்குமாகும். செம்மேகம் என்பது சூரியன் மறைந்த பிறகு தோன்றுவதாகும்.
இஷா : செம்மேகம் மறைந்ததிலிருந்து இரவின் பகுதி வரைக்குமாகும்.
அஸர் தொழுகைக்கு சிறப்பிற்குரிய நேரம் ஒரு பொருளின் நிழல் அது போன்று இரண்டு மடங்காகும் வரையாகும். அதற்குரிய நிர்பந்தத்திற்குரிய நேரம் சூரியன் மறையும் வரையுமாகும். இஷாத் தொழுகைக்கு சிறப்பிற்குரிய நேரம் இரவின் மூன்றில் முதல் பகுதி வரையுமாகும். அதற்குரிய நிர்பந்த நேரம் சுப்ஹு வரையுமாகும்.
1. Fajr :  (Dawn-Prayer
Fajr begins at - true dawn or morning twilight  when the morning light appears across the full width of the sky.

 2. Dhuhr (Zhur - Mid-Day Prayer): when sun reaches its highest point and begins to decline.
Dhuhr ends when ‘Asr salaat begins(When the shadow of an object becomes its length)

3.Asr: When the shadow of an object becomes its length
  ‘Asr ends as the sun begins to set,

4.Maghrib :begins when sun completely set
  Maghrib lasts until 'Isha (till fading of twilight or complete darkness). 

5.‘Isha (Night-Prayer): when Shafaq (twilight) is set in.

ஸஜ்தா செய்வதற்கு தடை செய்யப்பட்ட நேரங்கள்: 

1) ஃப்ஜ்ருடைய ஃப்ர்ளு தொழுதபின் சூரிய உதயம் வரை.
2) சூரியன் அடிவானில் உதயமாவதில் இருந்து அது முழுமையாக உதயமாகும் வரை உள்ள நேரங்கள்.
3) சூரியன் நடு உச்சியில் இருக்கும் போது.
4) சூரியன் அடிவானில் மறைய ஆரம்பமாவதில் இருந்து அது முழுமையாக மறையும் வரை உள்ள நேரம்
5) அஸ்ருடைய ஃப்ர்ளு தொழுத பின் சூரியன் மறையும் வரை

Thursday, March 8, 2012

ஜும்ஆ தொழுகை

1.ஜும்ஆ தொழுகை:
நேரம்:  வெள்ளிக் கிழமை லுஹர் நேரத்தில் இமாமுடன் சேர்ந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழவேண்டும்.
முன் ஸுன்னத்துக்கள்,பின் ஸுன்னத்துக்கள் நான்கு ரக்அத்துக்கள் ஆகும்.
பருவ வயதை அடைந்தவர்கள் நாற்பது பேர் க்லந்து கொள்ள வேண்டும்.
இத்தொழுகையில் இமாம் இரண்டு குத்பாக்கள்(speech)ஓதுவார்.
அதில் 1,அல்லாஹ்வை புகழ்வ்து
2.நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதுவது
3.தக்வாவை(இறை அச்சம்)க் கொண்டு உபதேசிப்பது
4.குர்ஆன வ்சனத்திலிருந்து ஓதி விளக்கம் அளித்தல்
5.இரண்டாம் குத்பாவில் முஃமின்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிப் பிரார்த்தித்தல்.
இவையனைத்தும் ஜுமஆவின் ஃப்ர்ளுகள் ஆகும்.
இமாம் இரண்டாவது ரக்அத்தில் ருகூவிலிருந்து எழும்பிய பிறகு ஒருவன் சேர்ந்தால்?
ஜும்ஆவுடைய நிய்யத்தில் இமாமை பின்தொடர்ந்து நான்கு ரக்அத்துக்கள் தொழவேண்டும்.
இமாம் ஸலாம் கொடுத்தபின் ஒருவன் வ்ந்தால் ?
ளுஹருடைய நிய்யத் வைத்து நான்கு ரக்அத்துக்கள் தொழவேண்டும்
ஜும்ஆ தொழுகையின் சிறப்புக்கள்
ஒப்புக் கொள்ளப்படும் ஒரு துஆ நேரம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். "அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 935)
"ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 342, திர்மிதி 198)
"ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 881)
இந்த ஹதீஸைத் தெரிந்த பிறகும் நாம் ஒட்டகத்தைத் தேர்வு செய்யாமல் தாமதமாகலாமா?
இதயங்கள் இறுகி விடும்
"அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் ஜஃது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 460)

Wednesday, March 7, 2012

ஸுன்னத்தான தொழுகைகள்


சில முக்கியமான ஸுன்னத்தான தொழுகைகள்

 1.தஹிய்யத்துல் மஸ்ஜித்:காணிக்கைத் தொழுகை(tribute prayer)

நேரம்:  ஒருவன் பள்ளியில் நுழைந்தவுடன் உட்காருவதற்குமுன் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது.
ஃப்ர்ளு தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது சென்றால் இத்தொழுகை தொழ்வேண்டியதில்லை.

2.தஹஜ்ஜத்து தொழுகை:

நேரம்:  இரவில் தூங்கி விழித்து தொழும் தொழுகை.
எண்ணிக்கை:குறைந்த்து இரண்டு ரக்அத்துக்களாகும்.விரும்பினால் அதிகம் தொழுலாம்.அதிக நன்மை கிடைக்கும்.
நபி(ஸ்ல்) அவர்களுக்கு இத்தொழுகை கடமையாக்கப் பட்டுர்ய்ந்த்து.
இந்நன்மையை அல்லாஹ்வையன்றி யாரும் அறியமாட்டார்கள்.

3.வித்ரு தொழுகை:

நேரம்:இஷாவிற்குப் பின் ஸுப்ஹுக்கு முன் வரை வித்ருக்குள்ள  நேரமாகும்.
எண்ணிக்கை:
2---11 ரக்அத்துக்கள். ஒற்றை எண்ணிக்கையில் முடிக்க்க் கூடிய தொழுகையாகும்.

4.ளுஹாத் தொழுகை:

இது பகல் நேரத் தொழுகையாகும்.(9am –12pm)
நேரம்:சூரியன் மேல் உயர்ந்த்திலிருந்து உச்சி வானம் வரும்வரையுள்ள நேரமாகும்
எண்ணிக்கை:    2--8 ரக்அத்துக்கள் ஆகும்.
இரண்டிரண்டாக தொழவேண்டும்.

5.தராவீஹுத் தொழுகை
:
நேரம்: ரமழான் மாத்த்தில்  இஷாவிற்குப் பின் சுப்ஹு(வைகறை) வரையில் தொழுவது.
எண்ணிக்கை:இரண்டிரண்டாக தொழவேண்டும்.அத்ன் எண்ணிக்கை இருபது ரக்அத்துக்களாகும்.(உலக அள்வில் அறிஞர்களிக்கிடையே கருத்து வேற்றுமையுள்ளது. 4 அல்லது 10 ரக்த்துக்களாக )அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஜமாஅத்தாக தொழுவது ,ஹாஃபிழ்களை பின் தொடர்ந்து தொழுவது
மிகச் சிறந்த்தாகும்.

6.மழை வேண்டித் தொழுகை

7.சூரிய,சந்திர தொழுகை

8.இஸ்திகாராத் தொழுகை:

இஸ்திகாரா தொழுகையின் முக்கியத்துவமும் சிறப்பும்!

மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.
ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்? என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்! சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.

இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான்  சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்இஸ்திகாரா தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.