F "DEEN WE NEED" --- வகுப்பில்: திருநபியின் திருசரிதை-2

Saturday, April 21, 2012

திருநபியின் திருசரிதை-2


பாகம்--2

21.முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு குறைஷி மக்களால் வழங்கப்பட்ட பெயர்கள் யாவைஏன்?

உண்மையாளர்(அஸ் ஸாதிக்)நம்பிக்கையாளர் (அல்-அமீன்) என்று அழைக்கப்பட்டார்கள். காரணம் இவ்விரண்டு குணங்களின் அடிப்படையிலேயே வளர்ந்து வந்தார்கள்.

22.கஅபத்துல்லாஹ்வைப் புதுப்பிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்ன உதவியை செய்தார்கள்?
 கஅபத்துல்லாஹ் கட்டுவதற்குரிய கற்களை எடுத்துச் செல்லும் வேலை செய்தார்கள்.

23.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் வஹி இறங்க ஆரம்பித்தது?

40 ஆம் வயதில்.

24.முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த இடத்தில் முதன்முதலாக வஹீ இறங்கியது?

ஹிரா என்னும் குகையில்

25.முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து வஹியை கொண்டு வந்த வானவர் பெயர் என்ன?

ஜிப்ரயீல் (அலை)

26.முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக இறங்கிய வஹி எது?

அல்-குர்ஆனின் 96 வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள். (96:1-5)
27.முதன் முதலில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் எனவும் ஏற்றுக்கொண்டவர் யார்?

பெண்களில்: அன்னை கதீஜா (ரலி)
ஆண்களில்: ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி)
இளைஞர்களில்: ஹஜ்ரத் அலி(ரலி)
அடிமைகளில்: ஹஜ்ரத் பிலால் (ரலி)
அடிமைகளிலிருந்து விடுதலையடைந்தவர்கலில்: ஹஜ்ரத் ஜெய்துப்னு ஹாரிதா(ரலி)

28.இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக தாயிப் நகர் சென்ற நபி (ஸல்) அவர்களை அந்த நகரின் மக்கள் எவ்வாறு நடத்தினார்கள்?

நபி (ஸல்) அவர்களை மிகவும் மோசமாக நடத்தினார்கள்.
 நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக சிறுவர்களைத் தூண்டிவிட்டனர்.

அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களைக் கல்லால் எறிந்து அவர்களின் இரு கணுக்கால்களில் இரத்தம் வரும் அளவுக்கு காயப்படுத்தினார்கள்.

29.மக்காவாசிகள் (ஸல்) அவர்களையும்,அவர் தோழர்களையும் தீங்கிழைக்க காரணம் என்ன?

அக்காலத்தில் அரபிகள் கொண்டிருந்த மூடக்கொள்கைகளை,தீய செயல்களை,சிலை வணக்கங்களை இல்லாமல் ஆக்கினார்கள்.

ஓரிறைக் கொள்கை,சமத்துவம்,சகோதரத்துவம் சுதந்திரம் போனற நற்குணங்களை ஏவினார்கள்.
இதற்காகவே அம்மக்கள் அவர்களையும்,அவர் தோழர்களையும் தீங்கிழைக்க ஆரம்பித்தார்கள்.

30.நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?

      ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள்

31.நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?

      ஏறத்தாழ பத்து ஆண்டுகள்.

32.ஹிஜ்ரத் என்றால் என்ன?
வாழும் நாட்டில் தீயவர்களின் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.
33.இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்?

ஹபஸா (அபிசீனியா)

34.நபி(ஸல்) அவர்களும் அவர் தோழர்களும் ஏன் மதீனாவிற்கு சென்றார்கள்?

மக்கா காஃபிர்களின் கொடுமைகள் தாங்கமுடியாததால் புகலிடம் தேடி மதீனா நகர் சென்றார்கள்.

36.நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வழியில் எந்த குகையில் தங்கினார்கள்?

ஃதவ்ர் என்னும் குகையில்

37.எப்போது ஹிஜ்ரத் சென்றார்கள்? அப்போது அவர்களின் வயது என்ன?

நபிப்பட்டம் கிடைத்து 13ம் வருட்த்தில் .அப்போது அவர்களின் வயது 53 ஆகும்.

38.ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகரை விட்டுமதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து
.
39.மதீனாவாசிகள் நபி(ஸல்) அவர்களை எவ்வாறு வரவேற்றார்கள்?

அன்புடன் வரவேற்று அவ்ர்களின் உயரிய உபதேசங்களைக் கேட்டு இஸ்லாமில் இனைந்துக் கொண்டார்கள்.

40. நபி (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவிற்கு  எப்பொழுது திரும்பிச் சென்றார்கள்?

ஹிஜ்ரி 8ம் ஆண்டு அல்லாஹு அக்பர் என்ற தக்பீருடன் பைத்துல்லாஹ்வை அடைந்து வலம்(தவாஃப்)
வந்தார்கள்.

No comments:

Post a Comment