F "DEEN WE NEED" --- வகுப்பில்: March 2013

Friday, March 22, 2013

அல்-குர்ஆன்

இது உலக மக்கள் அனைவருக்காகவும் இறக்கி அருளப்பட்டதாகும்.இது அல்லாஹ் உடைய வேதமாகும் அதில் எந்த சந்தேகமும் இல்லைஇதுவே இறுதி வேதமாகும்.இதை அல்லாஹ்  லைலத்துல் கத்ர் என்ற புனிதமிக்க இரவில் இறக்கிவைத்தான்.வானவர் ஜிப்ரயில்(அலைஹி)  மூலம் இதை  படிப்படியாக,ஒவ்வொரு வசனங்களாக இறக்கிவைத்தான்.

இன்றுவரை எந்த விதமான மாற்றங்கள்  இடைச் செருகல்கள் இல்லாமல் மக்களின் உள்ளங்களிலும்எழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்டு வரும் இறை வேதமாகும்அன்று குரைஷிக் காஃபிர்கள் அல்குர் ஆனை அழித்திட-மறைத்திட-எரித்திட எத்தனையோ முயற்சிகள் செய்தனர்இறுதியில் முடியாது தோற்றுப்போய் பணிந்தனர்.போட்டி மறை ஈட்டிடுவோம் என சவாலிட்டவரிடம்ஓரே ஓரு வசனத்தையாவது கொண்டு  வாருங்கள் என்றும் அல்குர்ஆன் கேட்டது. திருமறையின் இந்தஅறைகூவல் அன்று மட்டுமல்ல 1400 ஆண்டுகளாக இன்று வரை இந்த உலகத்தாரை நோக்கி விடுக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இதுவரை எவரும் முன்வரவுமில்லைஇனியும், ஏன் இறுதி நாள் வரையும் எவராலும் உருவாக்கிடவும் முடியாது.

அல்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது தான் என்பதற்கு மேலும் பல வரலாற்றுச் சான்றுகள் அதிலே மின்னிக்கொண்டிருக்கின்றனஅதில் ஒரு சிலவற்றைக் கூறுகிறேன்


1.நூஹ் நபியின் கப்பல்


2.ஃபிர்அவ்னின் பாதுகாக்கப்பட்ட சடலம்.


3.ஆது,தமூது சமூகத்தினரின் குகை இல்லங்கள்



4.ஸபா நாட்டுத் தோட்டங்கள்


அல்லாஹ்தஆலா மனிதர்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மிகப் பெரிய அருட்கொடயாக இருப்பது திருக்குரானாகும்.அதை ஓதுபவர்களுக்கு அல்லாஹ் பல சிறப்புக்களையும் வழங்கியுள்ளான்.அதாவது


*நீங்கள் குர்ஆனை ஓதுங்கள், நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு பரிந்துரை செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)



*குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் மறுமை நாளையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)


*உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: புகாரி)


*குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன்படி செயல்பட்டவர்கள் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார்
கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)


*அல்லாஹ்வுடைய வேதமாகிய குர்ஆனிலிருந்து யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும்.(ஆதாரம்: திர்மிதி)

எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப் போல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: திர்மிதி)


*இது முழு மனித சமூகத்துக்கும் உரிய வாழ்க்கை வழிகாட்டி நூலாகும்.


*முன்னைய இறை வேதங்களின் அடிப்படைகளையும் உள்ளடக்கிய பூரண வாழ்க்கைத் திட்டமாகும் : (அத்தி : 42 , வசனம் 13) 

*மிகைக்க முடியாத சவால்களுடன் வந்த அற்புதமான வேத நூலாகும்!


இவ்வுலகில் வாழும் அனைவரும் ஒரு நல்ல உதாரணமாக இருப்பதற்குத்தான் விரும்புவார்கள்இப்படி எல்லோருமே விரும்பக்கூடிய ஒரு நல்ல உதாரணத்தைப் பெற வேண்டும் என்றால் இந்தக் குர்ஆனை ஓதுவதன் மூலமே இந்தச் சிறப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்


இதில் பல அத்தாட்சிகளையும் நமக்கு விளக்கியுள்ளான்.


அறிவியல்வாழ்க்கை சட்டம்,நல்ல பண்புகள்,உலகம் தோன்றிய வரலாறு,மறுமை நாள் என்று பல விஷயங்களை அல்லாஹ் இந்த குரான் மூலம் நமக்கு கற்றுதருகிரான்.இந்த குரானை நாம் பேணிப்பாதுகாக்கவேண்டும்.அதற்காக பெட்டியில் வைத்து பூட்டுவதுஅல்லஇதை  நன்றாக ஓதி நாமும் விளங்கிமற்றவர்களுக்கும் எடுத்துசொல்லவேண்டும்.இதில் நமக்கு பல படிப்பினைகள் இருக்கிறது.
அல்லாஹ் நமக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பதற்காகவே இந்த ‘குரானை’ நம் மீது இறக்கியுள்ளான்.ஆனால் நாம் உண்மையிலேயே அச்சப்படுகிறோமா..?சற்றுசிந்திப்போம்.

ஆனால் அல்லாஹ் சொல்கிறான் இதை நாம் ஒரு மலையின் மீது இறக்கியிருந்தால் அது அல்லாஹ் வின் அச்சத்தால் பிளந்து போய்விடும் என்று …அப்படி என்றால் ஆறு அறிவு படைத்தமனிதன்,சிந்துத்து செயல் படும் மனிதன் எவ்வாறு அஞ்சவேண்டும் என்பதை  அல்லாஹ்  நமக்கு சுட்டிக்காட்டியுள்ளான்.



ஆகவே நாம் இந்த குரானை உள்ளச்சத்தோடு ஓதி இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற அல்லாஹ் அருள்புரிவானாக….ஆமீன்

Friday, March 15, 2013


நோன்பு


ரமளான் மாதம் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.மனிதனின் உடலையும், உள்ளத்தையும், சிந்தனைகளையும் பக்குவப்படுத்தி இவ்வுலகிலும் மறு உலகிலும் இன்பமான வாழ்வுக்கு பயிற்சியளிக்கும் திட்டங்களைக் கொண்டதே இந்த ரமழான் நோன்பாகும் .

இறையச்சம் ஏற்பட்டு உடல், உள்ளம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் வாய்ப்பு ஓர் முஸ்லிமுக்கு கிடைக்கிறது.இதை மருத்துவ உலகமும் உண்மை என்று ஒப்புக் கொண்டுள்ளது.பல ஆராய்ச்சிகளும் அதற்கு அத்தாட்சி அளிக்கின்றன.

நோன்பு என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கடமையல்ல. இதற்கு முன் வாழ்ந்த எல்லா சமூகத்தாருக்கும் கடமையாக்கப்பட்ட ஒன்றாகும். அவர்களும் நோன்பிருந்து வந்ததை அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டவாறே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் பயபக்தியுடையவர்களாகலாம் (2:183)

ரமளான் மாதத்தில் தன் அடியார்கள் நோன்பு நோற்க வேண்டுமென இறைவன் பின்வருமாறு கட்டளையிடுகிறான்.
فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ
உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்க வேண்டும்’.(2:185)

 யார் மீது நோன்பு கடமை? என்றால்,

1) பருவமடைந்த முஸ்லிமான ஆண்பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும் பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்குமாறு ஏவலாம்.

 நோன்பு யாருக்கு கடமையில்லை ? என்றால்,
 நன்மைதீமையை பிரித்தரிய முடியாதவர்கள் மூளை வளர்ச்சி இல்லாதவர்கள்வயோதிகத்தால் புத்தி மாறியவர்கள் ஆகியோர்கள் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
 நோன்பை விடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள்   யாரென்றால்
1. நோயாளி :                                   
2.பிரயாணத்தில் உள்ளவர்கள்
3 மாதவிடாய்,மற்றும் குழந்தைப் பெற்றத் தீட்டுள்ள  பெண்கள்.
                     :   இம்மூவரும்  நோன்பை ரமழானுக்குப் பிறகு நோன்பு பிடிக்க வேண்டும்
4. வயது முதிந்தவர்கள் : ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
.தடைசெய்யப்பட்டவர்கள்.
மாதவிடாய் ,மற்றும் பிரசவத் தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும்.(ஹைலு ,நிஃபாஸ் உள்ள பெண்கள்)
ரமழானின் சிறப்பு
நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்குகுர்ஆன்வேதம் ரமளானின்லைலத்துல் கத்ர்இரவில் தான் அருளப்பட்டது
இம்மாதத்தில் தான் அல்லாஹ் அதிகமான நன்மைகளை வழங்குகிறான். ஏராளமான அருட்கொடைகளை அடியார்களுக்கு வழங்குகிறான். நன்மைகளை நல்கி அருட்கொடைகளை அள்ளி வழங்கும் புனித மாதம்! வெகுமதிகளையும், அன்பளிப்புகளையும் வாரிவாரி வழங்கும் ஏற்றமிகு மாதம்!!
இந்த மாதத்தின் மகிமையை இறைவனே தனது திருமறையில் புகழ்ந்து பேசுகிறான்:
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنْ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ
ரமளான் மாதம் எத்தகையமகத்துவமுடையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் நேரான வழியைத் தெளிவாக்கக்கூடியதாகவும், நன்மை தீமைகளை பிரித்தறிவக்கக்கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன்(என்னும் இவ்வேதம்)அருளப்பெற்றது…… ஆகவே யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். (2:185)
 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :
இம்மாதத்தின் ஆரம்பம் அருள்மிக்கதாகவும்
 நடுப்பகுதி பாவமன்னிப்பை வழங்கக் கூடியதாகவும்,
இறுதிப் பகுதி நரக நெருப்பிலிருந்து விடுதலை வழங்கக்கூடியதாகவும் உள்ளது.
மறுமை நாளில் நோன்பாளிக்காக அவனது நோன்பு சிபாரிசு செய்யும்.அன்று அவர் மகிழ்வுடன் அல்லாஹ்வை சந்திப்பார்.
சொர்கத்தின் எட்டுவாயில்களில்ரய்யான்என்னும் வாசலும் ஒன்று.அதில் நோன்பாளிகள மட்டுமே நுழைவார்கள்.
மேலும், ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்பப்படுகின்றன. மேலும், சைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. (நூல் : புகாரி )
இம்மாதத்தில்சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுன்றனஎன்றால்நல்லமல்கள் பெருகுவதற்கும் , அமல்கள் செய்பவர்களுக்கு ஆர்வமூட்டுவதற்கும் தான்!’
அவ்வாறேநரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றனஎன்றால்இறைநம்பிக்கையாளர்களுடைய பாவங்கள் குறைவதற்காகவும், தீய செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காகவும் தான்!
இம்மாதத்தில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெறும் சிறந்த பயிற்சி ஏனைய மாதங்களிலும் தீமைகள் புரியாது மக்களைக் காத்து ஆண்டுமுழுவதும் தூய வாழ்வு வாழ துணை புரிகிறது
.வல்ல நாயன் ;அல்லாஹ் ரமளான் மாதத்திற்கு ஏனைய மாதங்களிற்கில்லாத பல சிறப்பம்சங்களை வழங்கியுள்ளான்.அவற்றுள் சில:-
1. நோன்பு அல்லாஹ்வுக்குரிய வழிபாடு. அது இறை நெருக்கத்தை அதிகரிக்கிறது.
2. நோன்பு இறை நினைவை ஏற்படுத்துகிறது
4. மனதைக் கட்டுப்படுத்தப் பயிற்சியளிக்கிறது
6. ஷைத்தானின் ஊசலாட்டங்களை கட்டுப்படுத்கிறது.
7. உடல் நலனைப் பேணுகிறது
8. பாவத்திற்கு பரிகரமாகிறது.
9. நோன்பாளியின் துஆ மறுக்கப்படுவதில்லை.இறைவனால்அங்கீகரிக்கப்படும்.
நிச்சயமாக நோன்பாளி நோன்புதிறக்கும் வேளையில் கேட்கும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ( ஸுனனு இப்னு மாஜா
எனவே நாம் ரமளானின் முழுமையான நன்மைகள் யாவும் பெற்று ரமளானின் ஒழுக்க  நெறிகளையும், மாண்புகளையும் வாழ்வு முழுவதும் கடைபிடிக்க வல்ல ரஹ்மான் அருள் பொழிவானாக! ஆமீன்