சில முக்கியமான ஸுன்னத்தான தொழுகைகள்
1.தஹிய்யத்துல் மஸ்ஜித்:காணிக்கைத் தொழுகை(tribute prayer)
நேரம்: ஒருவன் பள்ளியில் நுழைந்தவுடன் உட்காருவதற்குமுன் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது.
ஃப்ர்ளு தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது சென்றால் இத்தொழுகை தொழ்வேண்டியதில்லை.
2.தஹஜ்ஜத்து தொழுகை:
நேரம்: இரவில் தூங்கி விழித்து தொழும் தொழுகை.
எண்ணிக்கை:குறைந்த்து இரண்டு ரக்அத்துக்களாகும்.விரும்பினால் அதிகம் தொழுலாம்.அதிக நன்மை கிடைக்கும்.
நபி(ஸ்ல்) அவர்களுக்கு இத்தொழுகை கடமையாக்கப் பட்டுர்ய்ந்த்து.
இந்நன்மையை அல்லாஹ்வையன்றி யாரும் அறியமாட்டார்கள்.
3.வித்ரு தொழுகை:
நேரம்:இஷாவிற்குப் பின் ஸுப்ஹுக்கு முன் வரை வித்ருக்குள்ள நேரமாகும்.
எண்ணிக்கை:
2---11 ரக்அத்துக்கள். ஒற்றை எண்ணிக்கையில் முடிக்க்க் கூடிய தொழுகையாகும்.
4.ளுஹாத் தொழுகை:
இது பகல் நேரத் தொழுகையாகும்.(9am –12pm)
நேரம்:சூரியன் மேல் உயர்ந்த்திலிருந்து உச்சி வானம் வரும்வரையுள்ள நேரமாகும்
எண்ணிக்கை: 2--8 ரக்அத்துக்கள் ஆகும்.
இரண்டிரண்டாக தொழவேண்டும்.
5.தராவீஹுத் தொழுகை
:
நேரம்: ரமழான் மாத்த்தில் இஷாவிற்குப் பின் சுப்ஹு(வைகறை) வரையில் தொழுவது.
எண்ணிக்கை:இரண்டிரண்டாக தொழவேண்டும்.அத்ன் எண்ணிக்கை இருபது ரக்அத்துக்களாகும்.(உலக அள்வில் அறிஞர்களிக்கிடையே கருத்து வேற்றுமையுள்ளது. 4 அல்லது 10 ரக்த்துக்களாக )அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஜமாஅத்தாக தொழுவது ,ஹாஃபிழ்களை பின் தொடர்ந்து தொழுவது
மிகச் சிறந்த்தாகும்.
6.மழை வேண்டித் தொழுகை
7.சூரிய,சந்திர தொழுகை
8.இஸ்திகாராத் தொழுகை:
இஸ்திகாரா தொழுகையின் முக்கியத்துவமும் சிறப்பும்!
மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.
ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்? என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்! சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.
இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான் சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:“நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்”இஸ்திகாரா தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.
மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.
ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்? என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்! சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.
இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான் சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:“நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்”இஸ்திகாரா தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.
No comments:
Post a Comment